கோயிலின் பிரமாண்டம் வியப்பில் ஆழ்த்தியது வரதராசபெருமாள் கோயில் தெலுங்கில் கல்வெட்டுகள் நிறைய இருக்க யார் கட்டியது என்று வினவினால் கிருஸ்ணதேவராயர் கட்டியது என்றார்கள். பெரிய பெருமாள் நான் கோயில்கள் செல்லும் பொழுது எம்மக்களின் பொறியல் திறன் கட்டடக்கலை கண்டு வியந்து நிற்பேன்.
அதைவிட பெரிய வியப்பு துணிக்கடையின் நுழைந்த போது பாபு லால் துணிக்கடைன்னு நினைக்க அங்கே எல்லா பெண் வாடிக்கையாளர்களும் சேலைகளின் சேலைகளை தெரிவு செய்யும் கடவுளை கண்ட பரவசத்தை அவர்கள் கண்ணில் கண்டேன. ஏனே இந்திய பெண்கள் எந்த ஜன்மத்திலும் விடுதலை பெற மாட்டார்கள் என்ற எண்ணம் வந்தது….. இப்படி புடவைக்கு நகைக்கும் அடிமைப்பட்டால் இதை காட்டியே உங்களை தங்களுக்கு கீழ் ஆண்வர்க்கம் அடக்கிதான் வைக்கும்….
புடவைக்கும் நகைக்கும் ஆசைபடா பெண்களை கண்டால் காணவில்லை ஆசையில்லாத மாதிரி நடிக்கும் பெண்களை நிறைய பார்த்திருக்கிறேன்.
அதைபோல் நகைகடையில் லட்சம் துணி எடுத்தாலும் கூட இரண்டு இலவச பைகளை வாங்கவிட்டால் இந்த பெண்களுக்கு திருப்தி வரவரவே வராது……
பெண்களே உங்கள் விடுதலை உங்கள் கையில் இந்த ஆசைகளில் இருந்து முதலில் விடுதலை அடையுங்கள் அதைவிட்டு ஆண்களை குறை சொல்லாதீர்கள்