manimalar எழுதியவை | நவம்பர் 7, 2009

தாய் மொழியில் பிறந்த குழந்தை அழுமா

குழந்தைகள் தாய்மொழியில் அழுவதாக தற்போது கண்டு பிடித்து உள்ளார்கள. மகப்பேறின் கடைசி மாதத்தில் கருவில் இருக்கும் குழந்தை தாயின் குரலையும் தாய் மொழியையும் கற்று கொள்வதாக பிரிட்டன் விஞஞானிகள் கண்டு பிடித்து உள்ளார்கள்.மேலும் மருத்துவ உபகரணங்களில் உள்ள நானோ துகள்கள் உடம்பின் டி.என்.எ பாதுகாப்பு அரண்களை உடைத்து பாதிப்பு உண்டாக்குவுதாகவும் கண்டு பிடித்து உள்ளார்கள் ஆதாரம். டைம்ஸ் ஆப் இந்தியா 7.11.09

manimalar எழுதியவை | நவம்பர் 6, 2009

காணும் கடவுள்கள்

தொட்டில் சேலையை விலக்கி
கன்னத்தில் ஒருவிரல் வைத்துறங்கும்
மகளை பார்த்து கொண்டிருந்தேன்
தூங்கிற பிள்ளையை பார்க்காதே
என்றாள் அம்மா

திடீரென தூக்கத்தில் சிரித்தாள்
கடவுள் வந்து சிரிக்க வைக்கிறார்
என்றாள் அம்மா

திடுக்கென்று அழுது தூங்கினாள்
காத்து கருப்பு பயம் காட்டுகிதென
தொட்டிலின் கீழ் இரும்புதுண்டை
வைத்தாள் அம்மா

மீண்டும் என் மகள் அழ
அடுக்களையிலிருந்து ஓடிவந்து
கச்சை பால் கொடுத்தாள்
என் மகளின் அம்மா

manimalar எழுதியவை | நவம்பர் 2, 2009

அப்பாவின் கடைசிஆசை

அப்பாவை தினமும் எழுப்பும்
என் செல்போன் அழைப்புகள்
மறுமுனையில் அப்பாவின்
“என்ன குழந்தை “ பதில்
இரத்தணுக்களில் இன்னும்

அத்தனை பிள்ளைகளிலும்
என்மீது கொள்ளைபிரியம்
கொண்ட அப்பாவின்
இரவு வணக்கமாக
என் விசாரிப்புகள்

உன்னோடிட்ட சண்டையில்
என் குரலுக்கெங்கிய
அப்பாவின் கடைசிஇரவில்
நான் பேசாத சொற்கள்
என் தொண்டையில்
நஞசாக கரைந்து
உடலெல்லாம் பரவி
உன் உயிரணுக்களை
அனுமதிக்க மறுத்துவிட்டன

குற்ற உணர்வுகள்
உன்னை குதறி தின்றும்
உன் உதடுகளை கிழித்தும்
நடைதளர்ந்த உன் ஆண்மை
என்னிடம் வருந்தவில்லை

என்றாவதொரு நாள்
நீ மன்னிப்பு கேட்டாலும்
உன்னை மன்னிக்க வியலாதற்கு
என்னை மன்னித்துவிடு

manimalar எழுதியவை | அக்டோபர் 31, 2009

இன்னுமா நம்புவிங்க இப்படி

எங்க அலுவலகத்தில் வேலை செய்யும் கீழ்நிலை ஊழியர் ஒருவர். மீசை மழித்து அலுவலகம் வந்திருந்தார்.

என்னப்பா என்ன விஷயம்

. ஒன்னும் இல்லை சார். எங்க பெரியப்பா ஒருவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள ஊரில் இறந்து விட்டார் அதான் இப்படி என்றார்.

எத்தனை வயது இருக்கும் என்றதற்கு

93 வயசு சார் என்றார்.

அவ்வளவு வயசு வரை இருந்திருக்கிறரே என வியந்து இருவரும் பேசி விட்டு
என்ன செய்தது இறநது விட்டார்.

சார் “லக்கான்” நிழல் பட்டு ஒரு கைகால் விளங்காம போய் படுக்கையில் கிடந்து இறந்து விட்டார்.

என்னது லக்கான் அப்படி ஒரு பறவையா?.

பறவை இல்லை சார். அது பாம்பு சார்.

பாம்பு எங்கய்யா பறககும் என்று கேட்டதறகு

சார். நூறு, இருநூறு வயசான பாம்புக்கு இறக்கை முளைத்து பறக்கும். அதன் நிழல் யார் மேல் விழுந்தாலும் அவங்களுக்கு கை கால் விளங்காமல் போயிடும் என்றார்.

என்னய்யா இது புது கதையா இருக்கு எங்க ஊரில் வேற கதை சொல்லுவங்க வயசான பாம்பு நாகரத்தினத்தை கக்கி அந்த வெளிச்சத்தில் இரை தேடும் அந்த நேரத்தில் சாணியை நாகரத்தினத்தின் மீது போட்டு பாம்பு போனவுடன் நாகரத்தினத்தை எடுப்பார்கள் என்று கதை விடு வானுக இங்க இப்படி ஒரு கதையா. உனக்கு யார் சொன்னா நீ பார்த்தயா என்று கேட்க

இல்லை சார் ஆனா உண்மை ஊரில எல்லாரும் சொல்லுவங்க இப்பவும் சொன்னங்க . அது மட்டும் இல்ல சார் இப்ப பர்வதமலையில் கோயிலில் இடி விழுந்ததே சார் அப்ப கூட நாலுபேர் இறந்து போனங்கள்ல அப்ப அந்த கோயில் கொடிமரத்தில் இடி விழுந்ததால் கொடி மர இரண்டாயிட்டாம்மே. அப்ப கொடி மரத்தல்ல இரண்டு மூனு கிலோ கணக்க தங்கமாயிட்டுனு தெரிஞ்சு நிறைய அரசியல்வாதிகள் பத்து இருவது கார்களில் வந்து தங்கத்தை அள்ளி சென்றார்களாம் சார். என்றார்.
எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.

யோவ் அப்படின்னா பேப்பர்ல்ல வந்து இருக்கனுமில்ல. வரவில்லையே.

இல்லை யார்க்கும் தெரியம கட்சிகாரங்க அமுக்கிடாங்களாம். என்று முழு நம்பிக்கையுடன் சொன்னார் .

அடப்பாவிகளா இன்னுமா நம்புவிங்க இப்படி. நம்மை மீட்க இனனொரு பெரியார் வந்தால் தான் முடியும் என்று நினைத்து கொண்டு வந்து சிரிப்பை அடக்கி கொண்டேன்

manimalar எழுதியவை | அக்டோபர் 31, 2009

நெடுஞ்சாலை பொம்மைகள்

நெடுஞ்சாலை குடிசைகளில்
வடக்கத்தியர்கள் செய்த
ப்ளாஸ்டர் ஆப் பாரிஸ் பொம்மைகள்
மாடமாளிகையின் வரவேற்பரைகளுக்கு
செல்ல காத்திருக்கின்றன
இன்னொரு நெடுஞ்சாலையின் ஓரங்கள்
அவர்களின் உயிர் பொம்மைகளின்
குடிசைக்காக காத்திருக்கின்றன

manimalar எழுதியவை | அக்டோபர் 30, 2009

மழை வேண்டும்

மழை வேண்டும்
மழை வேண்டும்
அடை மழை வேண்டும்
நடுநீசியில் தொடங்கி
விடியா காலையில் முடியும்
இடைஞ்சலில்லா மழை வேண்டும்
மழை வேண்டும்
மழை வேண்டும்

manimalar எழுதியவை | அக்டோபர் 30, 2009

பாதைகள் தோறும்

கடந்த பாதையின் கஷ்டங்கள்
கடந்த பின் தெரிவதில்லை
வருகின்ற பாதையின் வழிகளின்
வரைபடம் கிடைக்கவில்லை
கால்போன போக்கில் போக
கற்ற கல்வி அனுமதிக்கவில்லை
விதியே என செல்வதற்கு
ஈவேரா போதிக்கவில்லை
விட்டு விட்டு செல்வதற்கு
பாசம் விடுவதில்லை
விடுதலை உணர்வுக்கு தடையிட
முள்வேலிக்கு முறுக்கில்லை
உலகே ஓரணியில் திரண்டாலும்
போராட்டங்கள் ஒடுங்குவதில்லை
கைவிடுவதற்கு முல்லைதீவு ஒன்றும்
முல்லை பெரியாறில்லை

manimalar எழுதியவை | அக்டோபர் 25, 2009

pension calculation for tngovt servat

PENSION
LAST PAY DRAWN 9300
DEARNESS ALLOWANCE 4185
DATE MONTH YEAR
DATE OF BIRTH 30 6 1944
ADD 58/60 58
DATE OF RETIREMENT 30 6 2002
DATE OF APPOINTMENT 1 10 1971
TOT QULI SERVICE 8 30
HALF YEARS 2 62
NON QUALI-SERVICE
NET QUALI SERVICE 62
DCRG 209018
RESTRICTED TO 350000
PENSION 4650
COMMUTATION 233467
FAMILY PENSION 2790
REDUCED PENSION 2790
ACTUAL AMOUNT 4883

PENSION NAME
LAST PAY DRAWN 6725
DEARNESS ALLOWANCE 3026
DATE MONTH YEAR
DATE OF BIRTH 30 6 1944
ADD 58/60 58
DATE OF RETIREMENT 30 10 2002
DATE OF APPOINTMENT 25 2 1970
TOT QULI SERVICE 8 32
HALF YEARS 2 66
NON QUALI-SERVICE
NET QUALI SERVICE 66
DCRG 160896
RESTRICTED TO 350000
PENSION 3363
COMMUTATION 168824
FAMILY PENSION 2018
REDUCED PENSION 2018

manimalar எழுதியவை | அக்டோபர் 25, 2009

சோற்று பருக்கை மீன்கள்

அரிசி விலையேறிபோன
இது போன்றொரு தாது ஆண்டில்
ஆட்டா மாவு தோசையும்
மக்காச்சோள உப்புமாவும்
பிடிக்காவிட்டாலும் சாப்பாடாய் ஆனது
அன்றோரு காலையில்
அம்மா வைத்த நீர்ததண்ணீ ஆகாரத்தில்
பழையசோற்று பருக்கைகளை தேடி
கும்பாவில் என்கை துழாவியது போல
என் செல்லமகளின் சின்ன கை
மீன் தொட்டியில் அலங்கார மீன்களை
பிடிக்க துரத்தி விளையாடுகிறது-என்னை
படிக்க வைத்த என் அம்மாவால்

———–வே.பிச்சுமணி

பழைய பதிவுகள் »

வகைகள்