விஜய்யின் அடுத்த படம் சுறா என்பது தெரியும். அதற்கு அடுத்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய பாடிகாட் படத்தை தமிழில் எடுப்பதாகவும் அதில் விஜய் நடிப்பதாக உள்ளது. பாடிகாட் படத்தை தமிழில் எடுத்து விஜய் நடிப்பதை விட .இந்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் த்ரீ இடியட் படம் விஜய்ககு ரொம்ப பொருத்தமான படம். அமீர்கான் நடித்த பாத்திரத்தில் விஜயால் சிறப்பாக செய்ய முடியும் . ஒரு நல்ல படம் செய்த திருப்தியும் விஜய்க்கும் அவரது விசிறிகளுக்கும் ஏற்படும்
சுறாவுக்கு பின் விஜய்யின் அடுத்தபடம்
கவனிப்பாரற்ற விளம்பரங்கள்
சென்னை புறநகர் தொடர்வண்டி நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி கொண்டு இருக்கிறது. காத்திருப்போர் கண்கள் அங்கு தொங்கவிட்டிருக்கும் தொலைகாட்சி பெட்டிகள் பக்கம் போனதும் உடன் திரும்பிவந்து விட்டன. ஏன் என்று யோசித்தால் அதில் விளம்பரங்கள் மட்டும் திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தன. மக்களை கவர எந்தவிதமான உத்திகளும் இல்லாமல் மினசாரம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விளம்பரகட்டணம் தொகை இழப்பு இதுதான கைமீது கண்ட பலன். இதற்கு முன் திநகரில் வரும் வண்டி விவரங்கள் எங்க வந்து கொண்டிருக்கிறது போன்ற விவரங்கள் தெரிவிக்கும் போது மக்களின் கவனம் அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைகாட்சி பெட்டிகளில் கவனம் சென்றது இடையிடையே வந்த விளம்பரங்களும் மக்களின் கவனத்துக்கு வந்தது. அப்படி செய்ய விட்டால் கூட எத்தனை இளம் இயக்குநர்கள் குறும்படங்கள் வெளியிடுகிறார்கள் அதை ஒளிபரப்பி இடையிடையே விளம்பரங்களை ஒளிபரப்பினால் விளம்பரமாகும். அல்லது திரைப்படபாடல்கள் செய்திகள் கிரிக்கெட் போட்டிகள் போன்றவை ஒளிபரப்பலாம். ஒன்றுக்கும் உதவமால் சம்பந்தப்பட்ட மககள் வரிபணமும் கம்பெனிகளுக்கு வெட்டி செலவும் விளம்பர நிறுவனத்துக்கு கேவலமான பெயரும் தான் மிஞசும் .இந்த போக்கை மாற்ற சம்பந்தபட்டவர்கள் யோசிக்கலாம்
1 இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்:advertisement, விளம்பரங்கள். வணிகம், commerce, suburban station
அஜித்தின் அசல் படமும் அசல் தமிழனும்
இன்று மாலை முரசில் இரண்டு செய்திகள் அருகருகில் வெளியாகி இருந்தது. இரண்டுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக என் மனம் கூறியது.
முதல் செய்தி. கூடுவாஞ்சேரியில் செங்கல்பட்டு செல்லும் முக்கிய சாலையின் ஒரமாக ஒரு முதியவர் படுத்து கிடந்ததாகவும் அவருக்கு மனமிரங்கி ஏறியப்பட்ட உணவு பெட்டலங்களை சாப்பிடாமல் 5 நாட்கள் அந்த இடத்தில் கிடந்ததாகவும் காஞ்சிபுரம் மாவட்டஆட்சித்தலைவருக்கு தெரிவிக்கப்பட்டு செங்கல்பட்டு வட்டாட்சியர் வந்து அந்த பெரியவரை மருத்துவமனையில் சேர்த்து மருததுவம் பார்த்து அவர் நல்ல நிலைஅடைந்தவுடன் விவரம் கேட்ட போது, அவர் தனது சொந்த மகன்களால் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக சிற்றூந்தில் அழைத்து வரப்பட்டு கூடுவாஞ்சேரியில் தள்ளி விடப்பட்டதாகவும் மகன்களே தள்ளி விட்டு போன பிறகு என்ன வாழ்வு வேண்டி இருக்கிறது என்று உணவு சாப்பிடவில்லை என்று தெரிவித்தார் என்றும் மகன்களின் பெயர்களை வற்புறுத்தி கேட்டும் முதியவர் சொல்லவில்லை ஆனால் தனது பெயர் கலில் முகம்மது என்றும் தான் செல்வந்தர் என்றும் தன்னை வீட்டில் வைத்து பராமரிக்க பிடிக்காமல் மருமகளுடன் சேர்ந்து கொண்டு மகன்கள் இவ்வாறு தன்னை தள்ளி விட்டு சென்று விட்டார்கள் என்று தெரிவித்தார். அவரது பையில் இருந்த ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிட்டிருந்த திநகர் முகவரியில் விசாரித்தில் அதில வேறு நபாகள: இருப்பதாகவும் முதியவரின் மகன்களை கண்டு பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கபட்டிருந்தது.
மற்ற செய்தி: தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் ஒரு திரையரங்கில் இன்று அஜித் நடித்த அசல் திரைப்படம் வெளியானதை ஒட்டி அவரது விசிறிகள் காலையில் முதல் காட்சிக்கு முன்பாக ஆட்டு கிடா ஒன்றை கொண்டு வந்து திரைஅரங்கின் முன்பாக வெட்டி பலியிட்டு அசல் படம் வெற்றி வேண்டிகொண்டதாகவும் முதல் நுழைவுசீட்டை அந்த நகர சபை தலைவர் அளிக்க அஜித் விசிறி சங்க தலைவர் பெற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
உங்களுக்கு ஏதாவது தொடர்பு தெரிகிறதா.
Death certificate of Prabakaran
it is reported in the daily thanthi today that death certificate of ltte leader prabakaran has been received by cbi. while reading the column it is reported that a rti petition has been answered on 27.1.2010 that the death certificate of prabaharan has not been received by cbi . while asking home minisster india yester day about the death certificate of the above leader . he said that cbi has informed him that death certificate of prabakaran received by iit. god only knows who says true in this regard
கடன் அட்டை எளிதாகும் திருட்டு
என் மகளின் பொறியல்கல்லூரியில் IEEE உறுப்பினராக எல்லா மாணக்கார்களும் சேர வேண்டும் என்று சொல்ல அதனை எதிர்த்து அனைவரும் சேரக்கூடாது என முடிவு எடுத்ததால் என் மகள் IEEE உறுப்பினர் புதுப்பிக்காமல் இருந்தால் கடைசியில் பொறியியல் மாணவர்களுக்கான சுயநலபுத்தி கொண்டு மற்றவர்கள் தனித்தனியே புதுப்பித்து விட என் மகள் மட்டும் புதுபிக்காமல் என்ன செய்வது அவளது பேராசிரியர் கடன் அட்டை மூலம் பணம் செலுத்தி புதுபித்து கொள்கிறேன் என்றாள். நான் சரி என்று சொல்லி விட நாட்கள் நகர்ந்தாலும் புதப்பித்தபாடு இல்லை. கடைசியில் உங்கள் நண்பர் யாராவது கடன் அட்டை வைத்திருந்தால் புதுப்பியுங்கள் என்னிடம் சொல்ல நான் என்ன செய்வது என விளித்து எப்படி ஆன் லைனில் பணம் அனுப்பவது என தெரியாமல் சரி அனுப்பிதான் பார்ப்போம் என்று முடிவு செய்து எனது நண்பரிடம் 27 அமெரிக்க டாலர் அனுப்ப வேண்டும் என சொல்லி நண்பரின் கடன் அட்டை வாங்கி என் மகளின் மின்னஞ்சலுக்கு வந்த வலைதள முகவரி மூலம் அந்த வலைதளத்துக்கு சென்று அதில் குறிப்பிட்ட எல்லா விவரங்களை தெரிவித்து கடன் அட்டை விவரம் தெரிவித்து அதில் பாஸ்வேர்ட் கேட்கும் என பார்க்க அந்த வலைதளத்தில் அப்படி ஏதும் கேட்க வில்லை அதற்கு பதிலாக verification no என கேட்டு இருந்தது . அந்த எண் எது என நண்பரிடம் கேட்க அவரும் இது வரை கேள்வி பட்டதில்லை என சொல்ல கடைசியில் கடன் அட்டை பின் புறம் கையொப்பமிடும் வெள்ளை இடத்துக்கு பக்கம் மூன்று எண்கள் சின்னதாக குறிப்பிட்டிருந்தது அதுதான என மற்றொரு நண்பர் சொல்ல அந்த எண்ணை வலைதளத்தில் அடிக்க அதை ஏற்று கொண்டு 27 டாலரை அதன் கணக்கில் எடுதது கொண்டதாக உடன் மின்னஞ்சல் அனுப்ப என்ன டா உண்மையில் புதுப்பித்து இருக்குமா இல்லையா என சந்தேகம் வந்தது. மேலும் நமது கடன் அட்டை தொலைந்து விட்டால் நமது கணக்கில் இருந்து எளிதாக எந்தவித பாஸவேர்ட் இல்லாமல் எடுத்தவர் அல்லது திருடியவர் அவரது கணக்குக்கு மாற்ற வாய்ப்பு உள்ளது. என தெரிய வந்தது. சொந்த மா கடன் அட்டை வாங்கும் எண்ணம் எப்போது வந்தது இல்லை ரயில் பயண டிக்கட் வாங்க உபயோகபடுமென வாங்கலாமென்றிருந்த நான் அந்த எண்ணத்தை குழி தோண்டி புதைத்தது விட்டேன்
காதல்கடிதம
்
காலையில் சென்று வந்த
கடைத்தெரு கண்முன் வரமறுக்கிறது
காளைபருவத்தில் படித்த சாண்டில்யனின்
பூம்புகாரின் அங்காடித்தெரு கண்முன் விரிகிறது
காதல் நம்மிடையே பிறந்தால்
தயவுசெய்து நீயோ நானோ
வாய் வார்த்தைகளால் சொல்லக்கூடாது
கடிதங்களில் தான் சொல்லவேண்டும்
கவிதையாயிருந்தால் உத்தமம்
நீ அதில் வார்க்கும் வார்த்தைகள் எல்லாம்
கலைடாஸ்கோப்பில் இடப்பட்ட
வண்ண வளையல்களாய் எண்ணகோலமிடும்
1 இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்:கவிதை.அனுபவம், தமிழ் கவிதை
பிறந்த நாள் சான்றிதழுக்கு பதிலாக இறப்பு சான்றிதழ் வழங்கிய மாநகராட்சி
திருவனந்தபுரத்தில் முகம்மது என்ற சிறுவன் அந்த ஊர் மாநகராட்சிக்கு பிறந்த நாள் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க அந்த மாநகராட்சியோ அந்த பையன்க்கு இறப்பு சான்றிதழ் வழங்கியது. எந்த நாள் பிறந்த நாளோ அந்த நாளை இறந்த நாளாக குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட அலுவலரை கேட்டதற்கு அவர் எழுத்து பிழை(clerical error) என தெரிவித்து உள்ளார். அந்த பையனின் பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வழக்கு தொடரலாமா என உள்ளனர்
1 இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்:செய்தி. அனுபவம், நகைச்சுவை
திடீர் மழை
மழைத்துளி நூல்கள்
தரைதறி இறங்க
காற்றின் கைகள்
நீர் சேலை நெய்து
பூதேவிக்கு அணிவித்து
அழகுட்டியதன்ன
தொப்பலாய் நீ வருகையில்
மரம் செடி கொடி வெட்கி தலை குனியும்
காமம் என் கண்களில் சூடேற்றிய வேளையில்
ஊர்கண்கள் உன்னை மொய்ப்பது கண்டு
கோபம் உள் வெடிக்க
எனக்கெதிராய் என் அம்மா வீசிய
மழை வெறித்தவுடன் வந்தால் என்ன சனியனே
வார்த்தை கடன் வாங்கி
உன்னை திட்டவோ
மழையை வெறுக்கவோ
மனம் வரவில்லை
என் செயவேன் என்அன்பே
1 இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்:கவிதை.அனுபவம், தமிழ் கவிதை
வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்.
14.01.2010
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை.
எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை எமது இயக்கம் முற்றாக மறுக்கின்றது.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் மிகுந்த நலமுடனும் பாதுகாப்புடனும் உள்ளார். தேசியத் தலைவர் பற்றிய தவறான செய்திகளுக்கு எமது மக்கள் செவிசாய்க்காமல் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வீறுடன் களம் அமைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
அதோடு தேசியத் தலைவர் அவர்கள் வெகுவிரைவில் மக்கள் முன் தோன்றி உரிய நேரத்தில் உரை நிகழ்த்துவார்.
சர்வதேச ஒழுங்குகளுக்கு ஏற்ப எமது மக்களின் தற்போதைய நிலை, இலங்கை அரசின் நோக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்ட எமது தேசியத் தலைவர் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை புதிய வடிவில் நெறிப்படுத்தியுள்ளார்.
எமது தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் பாரிய இழப்புக்களை எமது மக்களுடன் நாம் சந்தித்துள்ளோம்.
இழப்புக்கள் என்பது எமக்கும் எமது மக்களுக்கும் புதியவைகள் அல்ல.
சிங்கள அரசின் சிந்தனைகளைத் தாண்டி எமது விடுதலைப் போராட்டம் புதிய வடிவம் பெற்று வீறுடன் எழுந்து நிற்கின்றது.
சிங்கள பேரினவாத அரசு எமத மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது மக்களுக்கு சரியான தீர்வு திட்டத்தை முன்வைக்காத வரை சிங்கள பேரினவாதற்திற்கு எதிராக எமது விடுதலைப்போர் எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் மாறுபட்ட வடிவங்களுடன் தொடர்வதுடன்.
எமது மக்களை ஏமாற்ற நினைக்கும் எந்த சக்தியினையும் நாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
ச.தமிழ்மாறன்
செய்தி தொடர்பாளர்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம் .
lttepress.com© 2010 | Privacy Policy
மனிதகழிவுகள்
மேல கோயில்பட்டி தெரு
நேராக சொர்க்கத்துக்கு செல்லும் பாதையா
பாதணிகள என்ன கீர்த்தனைகளையா எழுப்பும்
லாடம் அடித்த மாடுகள் செல்லும் தெருவில்
காயடித்த மாட்டு சிந்தனைகள்
மனிதர்களை மிதியடிகளுடன் தடைசெய்கின்றன
மனித கழிவுகளை உரமாயிட்ட
செழித்த வளர்ந்த கழனி நெல்சோறு
உனக்கும் உணவு
எனக்கும் உணவு
இந்த மனிதர்களின் கழிவுகள்
தங்களது கழிவை நெற்களின் இதழ்களிலிட்டு
பயிரை அசிங்கப்படுத்த நினைத்து
அசிங்கப்பட்டு போன
ரோகம் பிடித்த சாமிகள்