தேசத்துக்கு தனி மனிதன்
துரோகம் செய்தால் தேச துரோகம்
தேசம் ஒரு இனத்துக்கு
துரோகம் செய்தால் என்ன சொல்வது
தனிநபர் மேல் வன்முறை செலுத்தினால்
விதி என போய்விடும் மனிதன்
இனமிது வன்முறை செலுத்தினால்
வீதியில் வந்து போராடுவான்
சீமை முள் மரமாய்
தீவிரவாதம்
எரித்தாலும்
வெட்டினாலும்
மீண்டும் மீண்டும்
தளிர்க்கும்
அடிப்படை காரணத்தை
பூண்டோட வேரறுப்பது போல்
களையாவிடின்
களையாது
தீவிரவாதம்
பிடித்திருந்தால்
போராளி
வெறுத்துவிட்டால்
தீவிரவாதி
என்ன நியாமோ
தீவிரவாதிகள்
பைத்தியகாரனின்
கையில் உள்ள துப்பாக்கி
என்னசெய்யும்
ஏது செய்யும்
பைத்தியத்துக்கும் தெரியாது
துப்பாக்கிக்கும் தெரியாது
தீவிரவாத பிரிவினைகளில்
உள் பிரிவினையை எதிர்ப்பதும்
அரசு வன்முறை போன்றதுதானே
வல்லான் வகுத்தது வாய்க்கால்
காலத்திற்கும்
இன்று நேற்றல்ல ..செவிந்தியர்காலம் முதல் தொட்டே..(அதற்க்கு முந்தய வரலாறு பற்றி எந்த அறிவும்,அறிதலும் எனக்கு இல்லை)…வல்லான் வகுத்ததே வாய்க்கால்….ஆனாலும் கரை புரண்டு ஓடும் வாய்க்காலை தடுப்பது சிறிய அணை தான்.
எழுதியவர் ஆண்ட்ரு சுபாசு நாள் ஜனவரி 7, 2009
நேரம் 5:36 மு.பகல்
நன்றி ஆண்ட்ரு சிறிய ஆணைகள் தடுத்தாலும் பெரும் வெள்ளத்தில் மடைதிறக்க வேண்டிஉள்ளது
பிச்சுமணி
எழுதியவர் manimalar நாள் ஜனவரி 8, 2009
நேரம் 5:25 மு.பகல்