Last Updated :
கொழும்பு, மார்ச் 27- விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்று இங்கிலாந்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு இலங்கை அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலிச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் பதிவினை இங்கிலாந்து தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதன் மூலம் அந்நாட்டு அரசு தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கிறது என்று இலங்கை அரசு கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
புலிகள் ஆதரவு கட்சி குறித்து தம்மிடம் எந்த கருத்தும் பெறப்படவில்லை என்றும், இதுதொடர்பாக இங்கிலாந்து தூதரகம் எத்தகைய அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் இலங்கை கூறியுள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.