இந்த படம் பஞ்ச தந்திரம் இரண்டாம் பாகம் போல் நகைச்சுவையாக இருக்கும் . இந்த படத்தில் கமல் மொத்தம் உள்ள 6 பாடல்களில் 5 ஐ எழுதி உள்ளார். இந்த படத்தின் திரைக்கதை கமல் எழுதியது . இதன் வாயிலாக பாடலாசிரியராகவும் ஆகிவிட்டார். கமல் கே.எஸ் ரவிக்குமார் இணை எபபோதும் வெற்றி பெறும்.இந்த படம் வெளியிடுவதற்காக விஜய் நடித்த காவலன் படம் திரையிட திரையரங்கு கிடைக்காமல் செய்யப்படுகிறது என்றும் அதனால் விஜய் அப்பா ஜெவிட்டிற்கு சென்று வரும் தேர்தலில் ஜெ விற்கு ஆதரவாக பரப்புரை செய்வார் . சனவரியில் தனது ரசிகர்களுடன் பெரும் ஊர்வலமாக சென்று அதிமுகவில் விஜய் இணைவர் என செய்திகள் கசிய தொடங்கிறது வாராந் திகளில்.
வர போட்டியாளர்களை ஓட விடாமல் தடுத்து விட்டு ஒருவர் மட்டும் ஒடி வெற்றி பெறுவதை சாதனையாக ஆக்கி தங்களை தாங்களே பாராட்டி கொள்ளும் அவலம் தமிழ் திரைஉலகுக்கு எந்திரன் வாயிலாக புதிதாக நுழைந்து விட்டது. இந்த வியாதி மன்மதன் அம்பை தொற்றி விட்டது.